சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
சென்னை: கரூரில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த மதுபோதை வாலிபரும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் வாலிபர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.
அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என வீர வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.
மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும் குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு மாடல் ஆட்கள் இப்போது முட்டு கொடுக்க வருவார்கள் பாருங்கள்..... மணிப்பூர்.... நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க வருவார்கள் பாருங்கள்.
கெட்ட வாடையை நுகர்ந்துகொண்டு குளிர்காயும் உங்கள் மன நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். குற்றவாளிகளை விரைவாக தண்டிக்ககூடிய அரசாக தி மு க செயல்படுகிறது அதற்கான கடுமையான சட்டங்களையும் வகுத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கபடுகிறார்கள். சமூகத்தில் கோர எண்ணம் உடையவர்களை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள். குற்றம் நடக்கிறது என்றால் முதல் பொறுப்பு அந்த பகுதி மக்களை சார்ந்தது. சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் மக்களுக்கானவை. அதை மக்கள் பயன்படுத்தவேண்டும். குஜராத்தில் சட்டம் காற்றில் பறக்கிறது. . அங்கு குற்றவாளிகள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். பல வழக்குகளில் நீதி இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கூறுங்கள் யார் ஆட்சி நீதியின் நெருப்பில் சுடப்படவேண்டும்.
திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்...வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி...திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. 28.07.2022-ஆம் நாள் போதைப் பொருள்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை.....
கரூர் மாவட்டம் கழுகூரில் அதீத மதுபோதையில் வாலிபர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை... இவ்வளவு படு கேவலமான ஆட்சி தமிழ் நாட்டில் நடக்குது... ஊரெங்கும் கஞ்சா போதை பாலியல் குற்றம்....ரோட்டில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தால் கூட போதை ஆசாமிகள் தூக்கி சென்று விடுவார்கள் ...
கலவர கூட்டமவே இருக்குறவரை இங்க நீங்க வளரமுடியாது
இது போல் 200 ரூபாய் ஊப்பிஸ் கொடுக்கும் முரட்டு முட்டுதான் திமுக விற்கு நாம் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு கூவும் ஊபிக்கு 200 ரூபாயை வீசி விட்டால் ஊரை அமைதி ஆக்கி விடுவார்கள் என நினைக்கிறது
பெண் சிறார் பாதிப்பில் UP முதல் இடம், குஜராத் MP BEHAR எல்லாம் டாப் 10 இல் இருக்குதாம் ....இதை 40 வருடம் உத்தர பிரேதேசத்தில் ஆட்சி செய்த உன்னோட கூட்டணி கட்சி காங்கிரஸ் டெல்லிக்காரன் வடக்கனிடம் சொல்லு .
அங்கெல்லாம் அமைச்சரே சார் ஆகவில்லையே.
நாங்க வளர்ந்த அறிவார்ந்த சமூகம் ஆச்சே ஆனா இங்கே இப்டி ஏன் நடக்குது ?
உன்னாவ் வழக்கு -குல்தீப் செங்காரின் ஜாமின் ரத்து இதை எல்லாம் பாருங்க
சில ஜென்மங்கள் போடும் காமென்ட் எப்படி இருக்கிறதென்றால், அவன் 50 கொலைகள் செய்திருக்கிறான். நான் 10 கொலைகள்தான் செய்திருக்கிறேன் என்பது போல இருக்கிறது.. உன்குடும்பத்தை முதல்ல பாரு. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கிறே.. மதுக்கடைகளால்தான் குற்றங்கள் பெருகுகின்றன என்று சொன்னால் மறுத்து பேசுகிறாய்.
விஜய் நல்லவரோ கெட்டவரோ சினிமா நடிகர் அரசியலுக்கு வரலாமோ வரக்கூடதோ விஜெயின் அரசியல் வரவு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம். அது தற்போதைய தேவை. பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மக்களை பகடைக்காய்களாக கருதும் கட்சிக்கு அது ஏமாற்றத்தை தரலாம்.
விஜெயின் அரசியல் வரவு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் :: என்ன தாக்கம் 3 மாதம் ஒரு முறை வெளியே வருகிறான் , DMK வை திட்டுகிறான் , பீசப்பி ADMK எல்லாம் உதவக்கரைகள் என்கிறான் முடிந்து பனையூர் உள்ளே போயி ஒளிஞ்சிக்கிறான் இதில் என்ன தாக்கம் வரும்மேலும்
-
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
-
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
-
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசு; கருப்புக் கொடியேந்தி அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கடற்படையின் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா கப்பல் ஓமனுக்கு பயணம்; படங்களை வெளியிட்டு மோடி பெருமிதம்
-
முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்