சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
மும்பை: டிஜிட்டல் கைது மோசடியில் 68 வயதான மும்பை பெண்ணிடமிருந்து ரூ.3.71 கோடியை பறித்த, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களது பெயர் பண மோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்தார்.
ஆனால் அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று மர்மநபர் தெரிவித்து இருக்கிறார். ஆன்லைன் கோர்ட்டில் விசாரணையில் நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் அப்பெண் தனக்கு பணமோசடியில் தொடர்பு கிடையாது என்று தெரிவித்தார்.
விசாரணையில் அப்பெண்ணிடம் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.3.75 கோடியை அனுப்பி வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக அவர்கள் மேலும் கூறினார்.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் மக்களிடம் விழிப்புணர்வே கொஞ்சம்கூட கிடையாது அதனால் வந்த விளைவுகள் இவைகள்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார்கள்
சபாஷ் ஜிதேந்திர, நீ வாழ்க உன் குலம் வாழ்க உன்னை பெற்றோர் பூரிக்க
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை வங்கிகள் கடைபிடிக்கவேண்டும் .முதல்முறையாக ஆன்லைனில் பரிவர்த்தனை செயும்போது வங்கியிலிருந்து நேரிடை தொடர்புமூலம் காரணம் அறியப்பட்ட பிறகே அந்த பரிவர்த்தனை அங்கீகரிக்கவேண்டும் .ஆன்லைன் பரிவர்தனேயே இல்லாத
கணக்கில் இவ்வளவு பெரிய தொகை தனிஒருவர் கணக்கிற்கு செல்லும்போது விசாரிக்கவேண்டும் .தனிஒருவர் கணக்கில் பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யும்போது வருமானவரி அமைப்புக்கு தானாக செய்தி அனுப்பும் நடைமுறைகளையும் கடைபிடிக்கவேண்டும் .
டிஜிட்டல் கைது மோசடிக்கு முடிவுக்கு கொண்டு வரணும்... தினமும் ஏராளமான பாதிக்கப்படுகின்றனர்
சபாஷ், ஜிதேந்திராமேலும்
-
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
-
மாநகராட்சி நிதி பல கோடி ரூபாய் கொள்ளை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
-
வர்த்தக துளிகள்
-
தொழில் துறை உற்பத்தி நவம்பரில் 6.70% வளர்ச்சி
-
இறக்குமதி வரியை குறைத்த சீனா இந்திய ஏற்றுமதி உயர வாய்ப்பு
-
ஆஸ்திரேலிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் அதிக ஏற்றுமதி