இளைஞர்கள் நல்வழிப்படுத்த திட்டங்கள் இல்லை: திமுகவுக்கு விஜய் கண்டனம்
சென்னை: '' தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், 'ரீல்ஸ்' மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையிலிருந்து சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
இதை மரத்தில் மேலே எரிய கூட்டம் , transformer இல் ஏறிய கூட்டம் சொல்லலாமா
விஜய் அவர்களே, அந்த சிறுவர்கள் உங்கள் ரசிகர்கள். உங்கள் ரசிகர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். ஆம் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டம் திமுகவிடம் இல்லவே இல்லை. அவர்களிடம் இருப்பது எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம், எப்படியெல்லாம் கற்பழிக்கலாம், எப்படியெல்லாம் ரவுடிசம் செய்யலாம் என்பது மட்டுமே. அதுதான் திமுகவின் கொள்கையே. அதில் இப்போது உங்கள் கட்சியும் சேரப்போகுது.
அப்போ அந்த 41 பேரும் உயிரோடு வந்துட்டாங்களா தம்பி?
டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று விஜய் இதுவரை கூறவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
///தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை,-/// த்தோபார்றா... அறிக்கையெல்லாம் வெளியிடுறாரு...? ஓ...அரசியல் கட்சித் தலைவர் ஆயிட்டியா...? தமிழத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதை கொண்டு செல்லும் திட்டம் ஆளுங்கட்சிக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா...ங்றதை அப்புறம் பேசிக்கலாம்... உன் யோக்கியதை என்னென்னு தெரிஞ்சுப்போமா...? உன்னுடைய ரசிகர்களான இளவட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்த உன்னால முடியுதா...?ன்னு மொதல்ல நீ சொல்லு, அப்புறம் அரசை திட்டலாம்...? உன் கட்சி இளைஞர்கள் என்று சொல்லப்படும் 13, 14, 15, 16, 17 வயசு பசங்க... டிரான்ஸ்பார்ம்ல ஏறுவது, பனைமரம் போன்ற உயரமான மரங்களில் ஏறுவது... மொட்ட மாடி ஸ்லாபில் நிற்பது... உன் வேனில் டயரில் சிக்குவது... குரங்கள் போல மரங்களில் தாவித் திரிவது.. என ஒரு செயலாவது நல்ல செயலா...? இதுதான் நீ இளைஞர்களை வழிநடத்தும் செயலா...? நீயே ஒரு கூட்டத்தில் “தம்பி இறங்குப்பா”...ன்னு பத்து தடவை கத்தியும் இறங்க மாட்டேங்குது.. அது. ஒரு கட்சித் தலைவனாகிய நீ நேரடியாக கெஞ்சுனாகூட கேக்காத தொண்டர்களான இளைஞர்களை நல்வழிப்படுத்த என்ன திட்டங்களை நீ வச்சிருக்க...? அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த எவனாவது சமூக வலைதளத்தில் நல்ல கருத்தை சொன்னா... அவனையும், அவன் குடுமபத்தையும் எவ்வளவு அசிங்கமா திட்டமுடியுமோ அவ்வளவு திட்றது... இப்படி எந்த ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்காம கூட்டத்தை சேர்க்குற நீ... மொதல்ல, உன் கட்சி இளைஞர்களுக்கு நல்வழிப்படுத்த திட்டங்களை வகுத்திட்டு.. அப்புறம் அரசை குறை சொல்லலாம்...
மிக சிறந்த கருத்து
ஆமா கரீட்டு. அரசு ரொம்பவே நல்ல அரசுதான். ஆனா அந்த அரசு சினிமாவ தடை பண்ணாது. அட்லீஸ்ட் இந்த மாதிரி காட்சிகளையாவது தடை பண்ணாது. சினிமாவுல ஹீரோ என்பவன் அட்ட கத்தி தான். அந்த அட்ட கத்தி நடிச்ச படங்களை வாங்கி வினியோகம் பண்ணி துட்டு அடிக்குறவன் ஒரிஜினல் கத்தி. அந்த ஒரிஜினல் கத்தி விஜய் கூட்டத்துக்குள்ள தன்னோட ஆளுங்கள அனுப்பி அடாவடி பண்ணி அதை போட்டோ எடுத்து பப்ளிஷ் பண்ணி இதோ பார் அட்டகத்தி ஆளுங்க பண்ற அட்டகாசத்தைன்னு திசை திருப்பிடுவானுங்க.வெளியில் இருந்து பாக்குறவனுக்கு அட்டை கத்தி ஆளுங்க ரொம்ப மோசம் அடங்கா பிடாரிங்கன்னு நம்ப வச்சிருவானுங்க. போஸ்ட் மரத்தின் மீது ஏறுனவனை பிடித்து நாலு சாத்து சாத்துனா அவன் டிஎம்கே ஏவி வுட்ட ஆளுங்குற உண்மை தெரிஞ்சிடும். க உ பிங்களுக்கும் இந்த உண்மை தெரியாதபடி வச்சுப்பானுங்க. இதுக்கு ஒரு சிஐடி விசாரணை போடணும்.
அவர்களுக்கு தெரிந்த பாதையெல்லாம் ஒரே பாதை ,தங்கள் கல்லாக்களை நிரப்புவது .அது ரத்தக்கறைப்படிந்த பணமாக இருந்தாலும் பரவாயில்லை .மாணவர்கள் கஞ்சா புகைத்தாலும் ,சாராயம்குடித்தாலும்,ஆசிரியர்கள் சாராயம் குடித்துவிட்டு வந்தாலும் ,காவலர்கள் சாராயம் குடித்துவிட்டு பணியிலிருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்கள் பணியை நன்றாகவே செயகின்றார்கள்,இவர்கள் கல்லா நிரம்பும்வரை.இவர்கள் செய்யும் பணிக்கெல்லாம் திருவள்ளுவரையும் ,அம்பேத்காரையம் கவசமாக வைத்துக்கொள்வார்கள் .இதுதான் மாடல் .
மில்லி உள்ள போனா கில்லி வெளிய வருவான் ..இப்படி பாடும் போது இவருக்கு தெரிய வில்லையா?
நீயே எல்லாதையும் கற்று கொடுத்து விட்டு, பதவிக்கு வருவதற்காக ஏன் கூவுகிறாய்??
இதற்கு முழு காரணம் உன்னை போல் உள்ள பொறம்போக்கு கூத்தாடிகள், எனவே அதற்கு பிராயச்சித்தமாக உனக்கு நீயே கண்ணாடி முன் நின்று துப்பிக்கொள்...
நிறைய குற்றங்கள் உன்னோட சினிமாவ பார்த்து தான் கத்துகிறாங்க.... அழிவுக்கு அடிப்படை காரணம் நீ நடிக்கும் அட்டை கத்தி சினிமா சண்டைகள் மற்றும் சாராய போதை வஸ்துக்கள்.... தான் கெடுக்கும் சினிமாவில் நடித்துவிட்டு இப்போ எதுக்கு நீலி கண்ணீர்.மேலும்
-
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
-
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
-
பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
-
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை