வங்கதேசத்தில் ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை : ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
டாக்கா; வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கி கொன்றனர்.
இந் நிலையில் வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர் பெயர் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பதாகும். இவர் ஆடை தொழிற்சாலையில் பாதுகாவலாளியாக இருந்து வந்தார்.
இந்த சம்பவம் மைமென்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவரை சுட்டுக்கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா (29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுடுவதற்கு பயன்பத்திய சிறியரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து (3)
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30 டிச,2025 - 20:35 Report Abuse
இது வருந்த தக்க நிகழ்வு. கண்டிக்கத்தக்கது 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
30 டிச,2025 - 19:48 Report Abuse
வங்க தேசத்தை நம் ஆளுமையில் கொண்டு வாங்க! பாரத் மா கி ஜெய்! 0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
30 டிச,2025 - 19:48 Report Abuse
Tragic and deeply disturbing. Yet another reminder of the insecurity faced by minorities in Bangladesh. Such targeted violence needs strong condemnation and urgent action from authorities to protect every citizen, regardless of faith. How many more Hindu deaths before international bodies acknowledge the pattern of violence in Bangladesh? 0
0
Reply
மேலும்
-
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
-
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
-
பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
-
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
Advertisement
Advertisement