முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்


சேந்தமங்கலம்: புதன்சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேந்தமங்-கலம் செல்லும் வழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டீ கடை, பேக்-கரி, பழ கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் அருகே, வாதநாராயண மரம் ஒன்று பெரி-தாக வளர்ந்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, திடீரென அந்த மரம் இரண்டாக முறிந்து விழுந்-தது.


இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி தப்பினர். நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், அப்
பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேந்த-மங்கலம் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

Advertisement