கேரளாவில் காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் முடிவுக்கு வரும்: பிரதமர் மோடி திட்டவட்டம்
புதுடில்லி: "டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என நடிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகளின் மேட்ச் பிக்சிங் விரைவில் முடிவுக்கு வரும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற வி.வி. ராஜேஷுக்கும், பாஜ தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: பண்டிகைக் காலத்தின் நடுவிலும், 2026ம் ஆண்டு தொடங்கும் போதும், திருவனந்தபுரம் நகரின் மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றதும், ஜி.எஸ். ஆஷா நாத் துணை மேயராக பதவியேற்றதும் வரலாறு படைக்கப்பட்டது. இதற்காக உங்களையும், ஆஷாவையும் வாழ்த்த விரும்புகிறேன்.
பல ஆண்டுகளாக கேரளாவில் பாஜ தொண்டர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். காங்., இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களின் மோசமான நிர்வாகத்தை அனைவரும் பார்த்து இருக்கிறோம். ஊழல் மற்றும் கொடூரமான வன்முறை கலாசாரத்தை உருவாக்கியுள்ளனர். டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என நடிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகளின் மேட்ச் பிக்சிங் விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேயர் பெருமிதம்
இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கேரளா மேயர் வி.வி. ராஜேஷ் கூறியிருப்பதாவது: இந்த அங்கீகாரம், பிரதமர் மோடி கேரளாவிற்கு அளித்த புத்தாண்டு பரிசு. திருவனந்தபுரத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், கேரளாவில் உள்ள பாஜ தொண்டர்களின் பல ஆண்டுக்கால கடின உழைப்பின் விளைவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் கூட்டணி - கேரளாவில் எதிரிகள் சபாஷ் மோடிஜி அவர்களே டெல்லி ,கல்கத்தா இங்கெல்லாம் காங்கிரெஸ் ,கம்யூனிஸ்ட் ஓரணி - கேட்டால் மதவாத எதிர்ப்பு அணி என ஈயம் பூசினாற் போன்ற பிறழ்முரண் வாதம் .ஆனால் உண்மை என்னவென்றால் மோடிஜி அவர்களே கேரளாவிற்கு மிக அருகில் தமிழ்நாடு -ஆம் கோயம்புத்ததூரில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் கொஞ்சி குலாவி ஓரணியில் நிற்பார்கள் . கொஞ்சம் தள்ளி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலக்காட்டில் கீரியும் பாம்புமாய் சண்டை போடுவார்கள் . நாகர்கோவிலில் கூட்டணி - எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தில் பரம வைரிகள் - பாகிஸ்தான் இந்தியா போல - நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சியில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடத்திய புரட்சி வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள் .இந்த கம்யூனிஸ்ட்களுக்கு காங்கிரஸ் மீதான நெடுங்காலத்துப் பகைமை - வெள்ளாட்டுக்கு ஓநாய்களுடன் உள்ள பகைமை அளவிற்கே பழையது” ஆனால் காலக்கொடுமை தமிழகத்தில் இந்த இரு தேசிய கட்சிகளும் பிராந்திய கட்சி திமுகவிடம் சீட்டுக்கு கையேந்தி நிற்கும் கையறு நிலைமை .ஐயோ பாவம்
டில்லியில் கூட்டணி.... கேரளா மாநிலத்தில்... கான் கிராஸ் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாக நாடகம் நடத்தி கொண்டு இருந்தார்கள்.... அவர்களின் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது.... கேரளா மக்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது.... இரண்டு பேருமே கூட்டு களவாணிகள் என்பது கேரளா மக்களுக்கு தெரிந்து விட்டது.
நிஜம் உண்மை சத்தியவாக்கு.மேலும்
-
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
-
ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
-
ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
-
யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்தில் 40 பேர் பலி
-
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்