முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? மத்திய அமைச்சர் முருகன் சவால்
சென்னை : ''நுாறு நாள் வேலை திட்டத்தில், வேலை வாய்ப்புகளை, மத்திய அரசு பறித்ததாக குற்றம் சாட்டும், முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், 'பாரத் 2026' என்ற இந்திய அரசு காலண்டர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
காலண்டரை வெளியிட்ட பின், முருகன் அளித்த பேட்டி:
கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில், நுாறு நாள் வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டு, 'விபி ஜி ராம் ஜி' என்ற சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தொடர்பாக, இரு அவைகளிலும், விவாதம் நடந்த பின், சட்டம் நிறைவேற்றப்பட்டது.
'விபி ஜி ராம் ஜி' சட்டம் இயற்றப்படும்போது, பார்லிமென்டில் தி.மு.க., உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களும் இச்சட்டம் குறித்து பேசினர். தற்போது இச்சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை பறித்து விட்டதாக போலியாக பிரசாரம் செய்கின்றனர். 100 நாட்களாக இருந்த வேலை, இன்று 125 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இச்சட்டத்தின் வழியே, பயனாளிகளுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்படும்போது, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்காமல், தேர்தலையொட்டி 100 நாள் வேலை பறிக்கப்பட்டதாக கூறி, மக்களை திசை திருப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தில், வேலை வாய்ப்புகளை, மத்திய அரசு பறித்ததாக குற்றம்சாட்டும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா?இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்
விவாதத்திற்கு வந்துட்டாலும்
அவ்வளவு வொர்த் இல்ல பா
எப்பா அவருக்கு வேலை இருக்கு..
உன்னை மாதிரி வெட்டி இல்ல..
அவருக்கு தான் நிறைய வேலை இருக்ககு தான் நீங்க உங்க வேலை ய பாருங்க
முருகன் அவர்களே டமில் நாட்டில் இன்னும் ஒரு தடவை ஐயோ கொல்றாங்களே நாடகம் வேண்டாம். சுப்ரீம் கோர்ட் டில் இருந்து நேரே ஆஜராகி விளக்கம் அளிக்கணும் அல்லது ஆட்சி டிஸ்மிஸ் செய்வோம் ன்னு உத்தரவு போட்டால் மட்டுமே முகஸ் ஸை கூண்டுக்கு கொண்டு வரலாம்.