'சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!'
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், விவசாயிகள் பலரும் தங்களது குறைகள், கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆனால், அதை கவனிக்காமல், வேளாண் துணை அலுவலர் சுரேஷ்குமார், வேளாண் அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த கலெக்டர், 'விவசாயிகள் பேசுவதை கேட்பதா, நீங்கள் பேசுவதை கவனிப்பதா?' என கேட்டார். அத்துடன், 'நீங்கள் எந்த துறை?' என கேட்க, 'வேளாண் துறை மேடம்' என, இருவரும் பதில் அளித்தனர்.
'உங்கள் துறை சம்பந்தப்பட்ட கூட்டத்தில், உங்களுக்கே அக்கறை இல்லேன்னா எப்படி...' என, கலெக்டர் கடிந்து கொண்டார்.
இதை கேட்ட விவசாயி ஒருவர், 'விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை, வேளாண் அதிகாரிகள் வெறும் சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...' என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.
உப்பு போட்டு சாப்பிட்றாங்களா இல்லையா தெரியல எதற்காக கைநீட்டி சம்பளம் வாங்குகிறார்களோ அதற்கு கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்
குறைகளைக் கேட்டு, அப்படியே நிவாரணம் செய்துவிடப்போகிறார்களா? இந்தக் கூட்டமெல்லாம், சும்மா எண்ணிக்கையைக் காட்ட மட்டும்தான் என்பது தெரிந்துதான் அவர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்மேலும்
-
சபரிமலை தங்கம் கொள்ளை: வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி