தமிழக பவுலர்கள் ஏமாற்றம்
சாகர்: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 'கூச் பெஹார்' டிராபி தொடர் நடத்தப்படுகிறது. இதன் அரையிறுதி (4 நாள்), மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மத்திய பிரதேச அணி பேட்டிங் செய்தது.
மத்திய பிரதேச அணிக்கு ஆர்யன் (39), ஹர்ஷித் (0) ஜோடி துவக்கம் தந்தது. அர்னவ் (17), கேப்டன் மனல் சவுகான் (18) கைவிட்டனர். யாஷ்பர்தன் 83 ரன் எடுத்தார். அடுத்து இணைந்த ஸ்பார்ஷ், பிரதீக் ஜோடியை பிரிக்க முடியாமல், தமிழக பவுலர்கள் திணறினர். இருவரும் அரைசதம் அடித்தனர்.
முதல் நாள் முடிவில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 275/5 ரன் எடுத்திருந்தது. ஸ்பார்ஷ் (64), பிரதீக் (50) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகத்தின் ஷவின் 3 விக்கெட் சாய்த்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
Advertisement
Advertisement