இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்


கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆறாவது நாளாக நேற்று காத்-திருப்பு போராட்டம் நடந்தது.
அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன.


காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத்த-லைவர் சங்கரேஸ்வரி உள்பட இடைநிலை ஆசி-ரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement