தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
புதுடில்லி: தெலுங்கானாவில் 7 மாநகராட்சிகள் மற்றும் 116 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ராகுல் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், ஹைதராபாத் மாநகராட்சியை தவிர்த்து தெலுங்கானாவில் உள்ள ஏழு மாநகராட்சிகள்,116 நகராட்சிகளுக்கு கடந்த 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காங்கிரஸ், பாஜ, பாரதிய ராஷ்ட்ரீய சமீதி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது. சுமார் 13 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 52 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இதில் பதிவான ஓட்டுகள் நேற்று( பிப்.,13) எண்ணப்பட்டன.
நகராட்சி
அதில் 32 மாவட்டங்களில் உள்ள 116 நகராட்சிகளில் உள்ள மொத்தம் 2,582 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 1,347 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்ட்ரீய சமீதி 716 வார்டுகளிலும், பாஜ 261 வார்டுகளிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 257 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாநகராட்சி
காங்கிரஸ் 4 மாநகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கரீம் நகர், மற்றும் நிசாமாபாத் மாநகராட்சிகளில் அதிக வார்டுகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இங்கு பிஆர்எஸ் கட்சிக்கு போதிய வெற்றி கிடைக்கவில்லை. மற்றொரு மாநகராட்சியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இங்கு மேயரை தேர்வு செய்ய பிப்.,16ல் தேர்தல் நடக்க உள்ளது.
திருநங்கை வெற்றி
இந்த தேர்தலில் சித்யாலா மாநகராட்சியில் வார்டு ஒன்றில் போட்டியிட்ட நகிலா சுதாகர் என்ற திருநங்கை 100 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுயேச்சைகள் ஆதிக்கம்
30 நகராட்சிகளில் அதிக சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், அங்கு நகராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கு அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனையடுத்து அங்கு முக்கிய கட்சிகள், கவுன்சிலர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
மகிழ்ச்சி
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் முடிவுகளானது, சமூக நீதி கண்ணயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வேரூன்றிய காங்கிரஸ் அரசின் மக்கள் முன்னுரிமை கொள்கைகளுக்கு கிடைத்த தெளிவான அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்களுக்கும் தெலுங்கானாவுக்கும் சொந்தமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பாஜ கருத்து
இந்த வெற்றி தொடர்பாக பாஜ மாநில தலைவர் ராமசந்தர் ராவ் கூறுகையில், அதிகார துஷ்பிரயோகம் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசின் ஆதிக்கத்தை தாண்டி பாஜ வளர்ச்சி பெற்று வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கட்சியின் ஓட்டு சதவீதம் 13 ல் இருந்து 20 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் ஆதரவு காரணமாக பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற நக்சலைட்கள், கம்யூனிஸ்ட்கள், ஏஐஎம்ஐஎம் ஆகியவைகள் ஒருங்கிணைந்து பாஜவை தோற்கடித்தன என்றார்.
சீக்கிரம் ராகுமல் கும்பல் கொள்ளையடிக்க திட்டம் தீட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் வரிப்பணம் நாட்டுக்கு பயண்படாமல் சில துக்கங்களையும் போய் சேரும். தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டும் ..அடுத்து 5 லட்சம் கோடி கடன் வாங்கி மாள துயரத்திற்கே கொண்டு சென்று விடுவார்கள்
ஓட்டு திருட்டு மூலம் பெற்ற வெற்றி செல்லாது என ராவுள் செல்லும். EVM மூலம் நடந்த மோசடி அப்டின்னு செல்லுவார்
Congress win by the help of EVM Machine and State Election Commissioner
வாழ்த்துக்கள், இது மிகப்பெரிய வெற்றி. கடந்த மாதம் மஹராஷ்ட்ராவில் நடந்த BMC எலெக்ஷனில் 90% வெற்றி பெறவேண்டிய பிஜேபி 50% தோல்வியை சந்தித்தது .
விடாதீங்க , தமிழகத்தில அம்பது கேளுங்க .
இப்ப ராகுலுக்கு EVM -ல சந்தேகம் வராது..மேலும்
-
விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை: உறுப்பு தானத்தால் 5 பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு
-
மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
சென்னையை மகிழ்விக்கும் சித்திரக்கதை நாயகர்கள்
-
தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
-
தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்