கடல் குதிரை கடத்தியவருக்கு 'காப்பு'

​தொண்டி: தொண்டி அருகே, கடல் குதிரைகளை கடத்த முயன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சோளியக்குடி பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று முன்தினம் இரவில், ராமநாதபுரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட உலர்த்தப்பட்ட கடல் குதிரைகள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி வந்த, தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த யாசர் அராபத், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து, 9 கிலோ உலர்த்தப்பட்ட கடல் குதிரைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement