இந்திய துறைமுகங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதலா? வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு
புதுடில்லி: இந்தியாவில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னலின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கமேனி கொல்லப்பட்ட பிறகும், ஈரான் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள தங்களின் ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயினின் ராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கேட்டது. ஆனால், ஸ்பெயின் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்த பேட்டியில்; எங்களுடைய (அமெரிக்கா) அனைத்து ராணுவ தளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்கள் துறைமுகக் கட்டமைப்புகள் சேதமடைந்து விட்டன. நாங்கள் உண்மையில் இந்தியாவையும், இந்தியத் துறைமுகங்களையும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், எனக் கூறினார்.
இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு நடத்திய ஆய்வில், அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது அமெரிக்க கப்பற்படையினர் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
ஊ ஃபீஸ் கதறல் அருமை. ஒரு tanker jelusil பார்சல்
Vaithi சிறிது மாதத்தில் நெதன்யாகு இஸ்ரேலிய படைகளை துருக்கிக்கு அனுப்பி துவசம் செய்ய இனொரு முறை மோடி இஸ்ரேல் செல்வார். நல்ல இருந்த பாரத தேசத்தையும், பெரும் கோவில்களையும் சிதைத்து, மக்களை தேசத்துக்கு எதிராக வெறுப்பை சமைக்கும் மதத்துக்கு மாற்றி, நம் தேசத்தை ஈர்குலைத்த துருக்கியை முதலில் துவசம் செய்திருக்கவேண்டும். பாவம் ஈரான், இஸ்ரேல் வலையில் மட்டிக்கொண்டது. எல்லா சர்வதேச சபைகளிலும் துருக்கி நம் தேசத்துக்கு எதிராகவே கோஷமிட்டது. இஸ்ரேல் தன பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய படி, இன்று நடுங்கி, பதுங்கி, பிதுங்கி ஒண்டியிருக்கிற துருக்கியை கட்டாயம் துவசம் செய்து இல்லாமல் ஆக்கும் . ஜெய் ஹிந்து.
Cos of modiji we are in safe land..few brainless criticise the foreign policy who could never imagine our smart move to gain confidence with rest of the world
கொளுத்திப் போடுவது அமெரிக்காவின் கைவந்த கலை!
தேவை இல்லாமல் இஸ்ரேல் சென்று, நெதயான்யாகுவிற்கு கட்டி பிடி வைத்தியம் செய்ததால் வந்த வினை இந்து
அமெரிக்க அதிபர் டிரம்மில் மூளைதான் பாதித்திருக்கிறது என்று நாம் நினைத்தோம். இல்லை, அவரின் கீழ் பணிபுரியும் அத்தனை அதிகாரிகளின் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியா மீது சம்பந்தமில்லாதவற்றை கூறி மற்ற உலகநாடுகளையும் திசைதிருப்புகிறார்கள் இந்த டிரம்ப் மற்றும் அவர் கூட்டாளிகள். இந்தியாவின் கடந்தகால வளர்ச்சி அவர்களுக்கு கண் உறுத்துகிறது.
செய்துவிட்டு செய்தியிட்டால் நல்லது.
மேலும் மேலும் இந்திய மூர்க்கர்களைக் கொதிப்படையச் செய்ய முயற்சி நடக்கிறது .........
அப்படி செய்திருந்தாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை.மேலும்
-
குப்பையில் கிடந்த 15 சவரன் நகை: போலீசிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளரின் நேர்மைக்கு குவியுது பாராட்டு
-
ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி
-
பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
-
ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணத்துக்கு இந்தியா இரங்கல்
-
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
-
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புது தலைமை நீதிபதி நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு