அரசு உயர்நிலை பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு

சின்னசேலம்: பாக்கம்பாடி அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு, தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சின்னசேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகம் சார்பில் பாக்கம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement