காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காசி சனீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

சனீஸ்வர பகவான் கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி நேற்று காலை, 8:24 மணிக்கு சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குரு பகவானின் வீடான மீனம் ராசிக்கு சென்றார். இதையொட்டி, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்ச நேயர் கோவில் அருகில் அமைந்துள்ள, காசி சனீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* ஊத்தங்கரை, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனி பெயர்ச்சி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் குப்தா தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement