கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்; நீதிபதி கேள்வி
ஊட்டி: 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை எப்போது முடிப்பீர்கள்?' என, நீதிபதி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆஜராகினர்.
விசாரணைக்கு பின், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறுகையில், ''விசாரணையின் போது, 'இந்த வழக்கு தொடர்பாக இதுவரை, 269 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது' என, நீதிபதியிடம் தெரிவித்தோம். 'இவ்வழக்கு எதற்காக இதுவரை நிலுவையில் உள்ளது. எப்போது முடிப்பீர்கள்?' என, புலன் விசாரணை அதிகாரிகளிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
''அப்போது, 'குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருந்து ஒரு 'ரிப்போர்ட்' வர வேண்டி உள்ளது. அதனால் தான் வழக்கு நிலுவையில் உள்ளது' என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கை ஏப்., 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்,'' என்றார்.
என்னவொ உடனேயே வழக்கை விசாரிச்சு மூணு நாளில் தீர்ப்பு சொல்லிடுவாங்க மாதிரி...
சம்பந்தப்பட்டவர்கள் வீடு பேற்றை அடைந்த பின்னர் தான்
அவ்வளவு சீக்கிரமாகா வந்துவிடும்?
ஏன் பழனி வயிற்றில் புளியை யை கரைகிறீர்கள் நீதி பாதி அவர்களெ.
இந்த ஜென்மத்தில் முடிக்க மாட்டோம் யுவர் ஆனர்.மேலும்
-
அமெரிக்காவுக்கு எதிரான போர்; ஈரானுக்கு ரகசிய தகவல்களை வழங்கியது ரஷ்யா
-
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? குலதெய்வம், பரிகார கோவிலை நாடும் அரசியல்வாதிகள்
-
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
5 நாட்களாக சரிந்த நிலையில் இன்று உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
-
அமெரிக்கா உடனான போர் விவகாரத்தில் மவுனம்; ஐநா மீது ஈரான் அதிருப்தி
-
காசி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா