அமெரிக்கா - தென்கொரியாவுக்கு மிரட்டல்; ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா
பியோங்யாங்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா 2வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சி அண்மையில் துவங்கியது. இது தங்களின் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வடகொரிய கருதுகிறது. இந்த சூழலில், நேற்று (மார்ச் 10) வட கொரிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, சோ ஹியோன் என்ற போர்க் கப்பலில் இருந்து ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஏவுகணை வடகொரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள இலக்குத் தீவுகளைத் துல்லியமாகத் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது.
இதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது 14 வயதுடைய மகளும் அறையில் அமர்ந்து பார்வையிட்டுள்ளனர்.இந்த ஒத்திகையின் போது, நம்பகமான அணு ஆயுதத் தடுப்புத் திறனை பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
தனது அரசியல் வாரிசாக மகளை கொண்டு வர அதிபர் கிம் ஜாங் உன் விரும்புவதாகவும், இதன் காரணமாகவே கடந்த 2022ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை சோதனை போன்ற நிகழ்வுகளில் மகளையும் பங்கெடுக்கச் செய்வதாக உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Almost 99% of North Koreans love in absolute poverty and misery, no access to clean food and water or safe environment or healthcare and they could not even get any help or even escape the country, while the people are dying of starvation these fools are testing missiles
எந்த நாட்டை எடுத்தாலும் வாரிசு அரசியல்தானோ ? வடகொரியாவும் சேர்ந்திருக்கிறது
திங்க சோத்துக்கே வழியில்லாதவன் பேசுறான்
ஏன் அவன் குண்டு போட்டா அது வெடிக்காதா அல்லது உயிர் தான் போகாதா?
INDIAN ஜி, அவனுக்கு மக்கள் பற்றி கவலை இல்லை, ஆவன் குடிக்கும் WHISKY, CIGARET, சாப்பாடு, பாதுகாப்பு செலவு ஒரு நாளைக்கு செய்யும் செலவு முழு தமிழ் நாட்டுக்கே உணவு போடலாம்.
தயாராய்ட்டம்ப்பா அடுத்த போருக்கு. ஏம்ப்பா உலகத்துல மக்கள் நல்லா இருக்குறது உங்களுக்கெல்லாம் புடிக்காதா? போய் வேற வேலை எதாவது இருந்தா பாருய்யா.மேலும்
-
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ராஜூ பி.புத்ரன்
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
-
போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!
-
வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு
-
வீரன்டா
-
கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு