துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சற்று தளர்த்தியிருந்த தாக்குதலை ஈரான் மீண்டும் வளைகுடா நாடுகளில் தீவிரப்படுத்தி உள்ளது.
கத்தார், ஈராக்கின், குர்த்திஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 11) ஈரான் ராணுவம் துபாய் விமான நிலையம் அருகே வீசிய ட்ரோன்கள் விழுந்து வெடித்தது.
இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார். தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது. இதனால் எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (1)
S.V.Srinivasan - Chennai,இந்தியா
11 மார்,2026 - 15:39 Report Abuse
உங்க அக்கப்போரை நிறுத்தி தொலைங்கப்பா. பேப்பர் படிக்கவே வெறுப்பா இருக்கு. 0
0
Reply
மேலும்
-
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ராஜூ பி.புத்ரன்
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
-
போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!
-
வளைகுடா நாடுகளின் வங்கிகள்,நிதி நிறுவனங்களை தாக்குவோம்; ஈரான் அறிவிப்பு
-
வீரன்டா
-
கடமையை நிறைவேற்றாமல் மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement