ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2

சென்னை: சென்னையின் பல இடங்களிலும் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லபட்ட, 2.40 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர்.

* பூந்தமல்லியில் இருந்து ஆவடி நோக்கி பைக்கில் சென்ற, பருத்திப்பட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரை மடக்கி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வீடு கட்டும் பணிக்காக, நகைகளை அடகு வைத்ததாக கூறினார்.

* மாதவரம் பால்பண்ணை அருகே, டாடா சரக்கு வாகனத்தில், நவீன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற, 75,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

* எர்ணாவூர் பாரதியார் நகர் சந்திப்பில் நேற்று மாலை, ருத்ரகுமார், 30, என்பவரின் காரில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட, 65,000 ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisement