அயன் பட்டா மாற்றம் உறுதி: தாசில்தார் தகவல்






பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம் கருமாண்டிசெல்லிபாளையம் மற்றும் சுள்-ளிபாளையம் பஞ்., பகுதிகளில் நிபந்தனை பட்டாவை, அயன் பட்டாவாக மாற்றக்கோரி, பலகட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பெருந்துறை தாசில்தார் அலுவல-கத்தில் நேற்று முன்தினம், தாசில்தார் சரவணன் முன்னிலையில் மக்கள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அரசின் கவனத்துக்கு கோரிக்கை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசும் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளது என்று, மக்க-ளிடம் தாசில்தார் உறுதி தெரிவித்தார்.

Advertisement