தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியில் நேற்று இரவு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தன் காரில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த தேர்தல் செலவின பார்வையாளர் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் மது அருந்தி விட்டு படுத்து இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த சோபன்பாபு, 52, என்பவர் மீது எதிர்பாராவிதமாக மோதியது.


இதில், அவர் காலில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement