ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

விழுப்புரம்: ஆற்றில் மீன் பிடித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விஷ்ணு, 14; -கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நேற்று விடுமுறை என்பதால், அதே பகுதியில் உள்ள மலட்டாற்றில் நண்பர்களுடன் 10:00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளமான பகுதியில் விஷ்ணு மூழ்கி இறந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரது உடலை மீட்டனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement