கருட வாகனத்தில் ராமர் வீதி உலா

கோவை: ராமநவமி பிரம்மோற்சவம் மார்ச் 18 காலை திருமஞ்சனத்துடன் துவங்கியது. மாலையில் பகவத் பிரார்த்தனை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விஷ்வக் சேனாராதனம், வசுதேவ புண்யாஹவாசனம், ரக் ஷா பந்தனம், கருடப்பிரதிஷ்டை நடந்தது.

தொடர்ந்து சிம்மம், ஹம்ஸம், சேஷ, ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். நேற்று ராம்நகர் வீதிகளில் கோதண்டராமர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.

இன்று (24)கஜ வாகனத்தில் வருகிறார். நாளை (25) காலை 9:30 க்கு திருமஞ்சனமும், மாலை 5:30 க்கு திருக்கல்யாண மஹோத்ஸவமும் நடக்கிறது.

Advertisement