மாணவி தற்கொலை

அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகள் ரோகினி, 14; இவர் வயலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். வீட்டு வேலை செய்யாததால் பாட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, 22; ம் தேதி, எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடன் அவரை வீட்டில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

Advertisement