தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல்;​தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் மார்ச் 30ல் துவங்குவதையொட்டி தேர்தல் பணிகளில் பங்கேற்கும் பி.ஓ1., பி.ஓ2., பி.ஓ3., அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மணிக்கூண்டு அருகே புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திண்டுக்கல் தாலுகா தேர்தல் உதவி அலுவலர் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார்.

பயிற்சி கலெக்டர் வினோதினி பயிற்சி அளித்தார். 1827 பேர் பங்கேற்றனர்.

Advertisement