தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்; நயினார் வலியுறுத்தல்
சென்னை: 'இனி ஒருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும்,' என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்தோரைத் தட்டிக்கேட்ட நான்கு வாலிபர்களைப் போதை கும்பல் அரிவாளால் தாக்கிய காணொளியும், செங்கல்பட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று சிறுவர்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி அச்சுறுத்தும் காணொளியும் வெளியாகியிருப்பது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
ஐந்தாண்டுகளாகத் தெருவெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால், புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் குற்றவாளிகளாக உருமாறி வருகின்றனர்.
தனது திறனற்ற நிர்வாகத்தால், தமிழகத்தைப் போதைப் பொருட்களின் கூடாரமாக மாற்றிய திமுக, இனி ஒருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும்! எனவே, தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்! போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை காக்க நயினார் வலியுறுத்துவது - திமுக வை மட்டுமின்றி பாஜக அண்ணாமலையையும் நிராகரிப்போம் என்கின்றார். உண்மைதான் வாழ்க வளர்க நயினார்.மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு