ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்க மப்பேடு விவசாயிகள் கோரிக்கை
கடம்பத்துார்: மப்பேடு பகுதியில் ஏரி நீர்வரத்து கால்வாய் செடிகள் வளர்ந்து புதர் சூழ்ந்துள்ளதை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. நீர்வளத்துறைக்குச் சொந்தமான இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அழிஞ்சிவாக்கம் ஒட்டேரிக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் உள்ளது.
இதில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் உள்ள நீர் வெளியேறும் வடிகால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து, புதர் சூழ்ந்துள்ளது. இதனால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். வரத்துக் கால்வாயை சீரமைக்க கோரி, பலமுறை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத்துறையினர், வடிகால்வாயை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு