மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

1

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மஞ்சுவிளையை சேர்ந்தவர் ராஜா சிங், 48; விவசாயி. இவரது மகன் தினகரன், 24; சுமை துாக்கும் தொழிலாளி. ராஜா சிங்குக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டது. தினகரன் தலையிட்டு, சமாதானப்படுத்த முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜா சிங், அருகில் கிடந்த ஆடு வெட்டும் கத்தியால், தினகரனின் மார்பில் குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த தினகரன், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில், போலீசார், ராஜா சிங்கை கைது செய்தனர்.

Advertisement