போலீஸ் செய்தி: கோயில் நகை திருட்டு
ராஜபாளையம்:ராஜபாளையம் சர்ச் தெரு அருகே மாரியம்மன் கோயிலில் சுவாமியின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி, உற்ஸவர் சிலையில் 4 கிராம் எடை கம்மல், மூக்குத்தி என 14 கிராம் தங்க நகைகளை காணவில்லை.
இதுகுறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்ததில் 50 வயது மதிக்கத்தக்க நபர் காவி வேஷ்டி அணிந்து பக்தர் போல் வந்தவர் திருடி சென்றது தெரிந்தது.
வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருடியவர் கைது
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே முகவூரை சேர்ந்தவர் வீரமணிகண்டன் 40, தனது சகோதரரின் டூவீலரில் தளவாய்புரம் கோயிலில் பால்குடம் எடுக்க வந்து கோயில் அருகே நிறுத்தி உள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரில் காணவில்லை. சோலைசேரி அருகே இரும்பு கடையில் டூ வீலரை விற்க நின்றிருந்தவரை பிடித்து தளவாய்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோவிலூரை சேர்ந்த சுந்தர் 28, எனத் தெரிந்தது போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள்: மத்திய உள்துறை செயலர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
பாக்., உளவுத்துறை சதி முறியடிப்பு; 3 பயங்கரவாதிகள் பஞ்சாபில் கைது
-
23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து 81.50 லட்சம் கோடி ரூபாய்
-
தொடரும் விற்பனை அழுத்தம் 6 மாதத்தில் 22 சதவீதம் சரிவு
-
பங்குகளை திரும்ப பெறும் அரபிந்தோ பார்மா