.கிரி காங்., வேட்பாளரை எதிர்த்து நிர்வாகி வேட்புமனு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில், முன்னாள் எம்.பி., செல்லக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.



கிருஷ்ணகிரியில், காங்., கட்சியில் உள்ளூரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க, நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால், சென்னையை சேர்ந்த செல்லக்குமாருக்கு, 'சீட்' வழங்கியதால் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த மாவட்ட, காங்., முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்., வேட்பாளரை எதிர்த்து, கட்சி நிர்வாகியே சுயேச்சையாக போட்டியிட
களத்தில் இறங்கியிருப்பதால், ஓட்டுகள் சிதறும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement