சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு

32

மயிலாடுதுறை: சீர்காழி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.


அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று சென்ற அவர், இன்று அதிகாலை சீர்காழியில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.


பொதுமக்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடினார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும், அங்குள்ள டீக்கடையில் மக்களுடன் மக்களாக அமர்ந்து டீக்குடித்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Advertisement