'ஆன்மிகத்தை ஆதரிக்கும் கூட்டம்!'
கோவை, ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதரின், 'விஷ்ணு சகஸ்ரநாம' சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால், போடப்பட்டிருந்த நாற்காலிகள் முழுதும் நிரம்பி, தரையிலும் பலர் உட்கார்ந்து பேச்சை கேட்டனர்.
மேலும் பலருக்கு இடம் கிடைக்காமல், வாசலில் நின்றபடி சொற்பொழிவை கேட்டனர். அவர்களில் முதியவர் ஒருவர், 'தேர்தல் நேரமாச்சே... ஆன்மிக சொற்பொழிவை கேட்க ஒருத்தரும் வந்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சு லேட்டா வந்தா, இப்படி கோவில் மண்டபம் நிறைந்து, வாசலில் நிற்க வேண்டிய நிலை வந்துடுச்சே...
'என்னதான் ஆன்மிகத்தை அழிப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பினாலும், அதை வளர்த்து ஆதரிக்கவும், ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
வாசகர் கருத்து (5)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08 ஏப்,2026 - 16:32 Report Abuse
இவ்வளவு ஆன்மீகவாதிகள் உள்ள தமிழ் நாட்டில், சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லுகிறவர்கள் வெற்றி வாகை சூடுகிறார்களே. அதுஎப்படி? 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 15:11 Report Abuse
எத்தனை பெரியார் வந்தாலும் ஆன்மீகத்துக்கும் இந்து மதத்திற்கும் என்றும் அழிவு கிடையாது. 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08 ஏப்,2026 - 06:49 Report Abuse
அரசியல் கட்சி ‘மாநாடுகளுக்கு’ 200, 300, பிரியாணி, பரிசு என்று அழைத்தால் வரும் கூட்டம், அலுத்துப்போய் அரை மணியில் கிளம்பிவிடும். ஆனால் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு, எத்தனை நேரமானாலும், நிற்க இடமில்லாவிட்டால் கூடப் பொறுமையாக இருந்து இறுதிவரை கேட்டு அனுபவித்தே செல்வார்கள் எங்கே, சனாதனத்தை ஒழிக்க அவதாரம் செய்த மஹாநுபாவர் ? 0
0
Reply
V Narayanan - ,இந்தியா
08 ஏப்,2026 - 06:19 Report Abuse
இது என்றும் ஆழ்வார்கள் ,நாயன்மார்கள், கடவுள்கள் இருந்த இடம் இருக்கும் இடம் .இந்த மண் ஆன்மீக மண்.தென்னாடுடைய சிவனின் மண் . 0
0
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
08 ஏப்,2026 - 10:58Report Abuse
அப்போ உங்க ஓட்டு திமுகவிற்கு கிடையாதா?... அந்த சாதனை செய்தோம் இந்த சாதனை செய்தோம் என்று ஸ்டாளின் அவுத்து விட்டது எல்லாம் வீணாகப் போச்சா... ஐயோ அய்யய்யோ...... 0
0
Reply
மேலும்
-
தி.மு.க., பிரசார வாகனம் ராயபுரத்தில் பறிமுதல்
-
மரத்தைச் சுற்றி கான்கிரீட் தளம் :சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
-
தி.மு.க., மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது: சிற்றரசு நம்பிக்கை
-
'ஆவின்' பாலக ஊழியரிடம் ரூ.24 லட்சம் பறிமுதல்
-
நெல் கொள்முதல் நிலையம் கூடலுாரில் புதிதாக திறப்பு
-
பதவிக்கு அருளும் ஆட்சீஸ்வரர் படையெடுக்கும் வேட்பாளர்கள்
Advertisement
Advertisement