'ஆன்மிகத்தை ஆதரிக்கும் கூட்டம்!'

5

கோவை, ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதரின், 'விஷ்ணு சகஸ்ரநாம' சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால், போடப்பட்டிருந்த நாற்காலிகள் முழுதும் நிரம்பி, தரையிலும் பலர் உட்கார்ந்து பேச்சை கேட்டனர்.

மேலும் பலருக்கு இடம் கிடைக்காமல், வாசலில் நின்றபடி சொற்பொழிவை கேட்டனர். அவர்களில் முதியவர் ஒருவர், 'தேர்தல் நேரமாச்சே... ஆன்மிக சொற்பொழிவை கேட்க ஒருத்தரும் வந்திருக்க மாட்டாங்கன்னு நினைச்சு லேட்டா வந்தா, இப்படி கோவில் மண்டபம் நிறைந்து, வாசலில் நிற்க வேண்டிய நிலை வந்துடுச்சே...

'என்னதான் ஆன்மிகத்தை அழிப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பினாலும், அதை வளர்த்து ஆதரிக்கவும், ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

Advertisement