அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
உளுந்துார்பேட்டை: 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்' என உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு ஏ.கொளத்துார், பூண்டி, சீதேவி, புகைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மக்களுக்கான திட்டங்களை் செயல்படுத்தினார். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொண்டு வந்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம், மலிவு விலையில் அம்மா மருந்தகம், அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் தி.மு.க.. ஆட்சியில் முடக்கி வைத்துள்ளது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், வீடு இல்லா ஏழைகளுக்கு ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்' என்றார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்புராயன், த.மா.கா., மாவட்ட தலைவர் அதையூர் பாண்டியன், பா.ம.க., மாவட்ட தலைவர் சத்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகன், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் அருள், புரட்சி பாரதம் கட்சி மாநில துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு