பெயின்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

செம்மஞ்சேரி: பெயின்டரை கல்லால் தாக்கிய போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் தானேஷ், 35; பெயின்டர். நேற்று முன்தினம், இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 33, என்பவர், போதையில் தகராறு செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அதில், சரவணன் கல்லால் தாக்கியதில், தானேஷ் பலத்த காயமடைந்தார்.

புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று சரவணனை கைது செய்தனர்.

Advertisement