ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பெரிய திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் தற்போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருக்கிறேன். இங்கு சவுதி அரேபிய அதிபர் முகமது பின் சல்மான் அல் சவுத்; ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது பின் சயத் அல் நஹ்யான்; கத்தாரின் அமீர் தமீம் பின் ஹமாத் பின் கலீபா அல் தானி, பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் பின் ஜாபர் அல் தானி மற்றும் அமைச்சர் அலி அல்-தவாடி; பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அகமது ஷா; துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன்; எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி; ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா; மற்றும் பஹ்ரைனின் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபா ஆகியோருடன் ஈரான் உடனான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொலைபேசியில் கலந்துரையாடினோம்.
இது தவிர, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனும் நான் தனியாக ஒரு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன்; அதுவும் அதேபோன்று மிகச் சிறப்பாக அமைந்தது. ஈரான் உடனான ஒப்பந்தம் குறித்து இறுதி கட்டமாக தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன; அவை விரைவில் அறிவிக்கப்படும். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பெரிய திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
SUBBU,MADURAI - ,
24 மே,2026 - 14:36 Report Abuse
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக சில பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கவும் செய்யாது, தனது அணு மற்றும் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தை நிறுத்தவும் செய்யாது என்று ஐ.ஆர்.ஜி.சி யின் உயர் அதிகாரி ஒருவர் மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான தஸ்னிம் தெரிவித்துள்ளது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 மே,2026 - 12:08 Report Abuse
யார் யாருடனோ பேசினீர்கள். சரி. ஆனால் நீங்கள் முதலில் பேசவேண்டியது இரான் அதிபர் மற்றும் அந்நாட்டு மற்ற தலைவர்களுடன் அல்லவா போரை முடிவுக்கு கொண்டுவர சமாதான பேச்சு பேசியிருக்கவேண்டும். அதை செய்வதைவிட்டு, மற்றவர்களிடம் பேசி என்ன பயன் டிரம்ப் அவர்களே...? 0
0
Reply
Venkataraman - New Delhi,இந்தியா
24 மே,2026 - 12:01 Report Abuse
அமெரிக்கா இந்த போரில் கடும் இழப்பை, தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து வெளியே வர இந்த அமைதி பேச்சுவார்த்தை,, அமைதி ஒப்பந்தத்தை ஈரான் நாட்டுடன் செய்து கொண்டுள்ளது. 0
0
Reply
சினிமா சுனாமி - mumbai,இந்தியா
24 மே,2026 - 10:14 Report Abuse
திருப்பு ..திருப்பு ..கமலஹாசன் மாதிரி சொல்லறார் இரான் அவர்கள் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இல்லாமல் இருக்கிறார்கள் 0
0
Reply
Sivaraman - chennai,இந்தியா
24 மே,2026 - 09:48 Report Abuse
தாங்கள் வாழ்நாளில் உலகிற்குச் செய்யும் நன்மையாக இருக்கட்டும். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement