பிரதமருடன் சந்திப்பு முடிந்ததும் சுரேஷ் கோபிக்கு போன் செய்த முதல்வர் விஜய்!

20


புதுடில்லி: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் தன்னுடன் போனில் பேசியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.


முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று டில்லி சென்ற விஜய், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.இன்று அதிகாரிகளுடன் பேசிய விஜய், தமிழகம் திரும்பினார்.


இந்நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளாவது: டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், என்னை போனில் அழைத்தார். நாங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். நாட்டின் முன்னேற்றம், தமிழகம், கேரளத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றும் உறுதிப்பாட்டை இருவரும் வெளிப்படுத்தினோம். ஒன்றிணைந்து வலிமை பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

Advertisement