பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி

போத்தனூர், மே 29-

ரத்தினபுரி காளிமுத்துவும், சூலூர் குள்ளப்பனும், பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில், மதுக்கரை மின் வாரிய அலுவலகம் முன்பு ஆடுகளை ஓட்டி சென்றனர்.

பின்னால் வந்த பைக் ஒன்று, குள்ளப்பன்,61, மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்த குள்ளப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குள்ளப்பன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மதுக்கரை போலீசார் பைக்கை ஓட்டி வந்த விக்ரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement