அய்யப்பன் கோவிலுக்கு பூமி பூஜை

ஆவடி: பட்டாபிராமில், புதிதாக அய்யப்பன் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்யப்பட்டது.

ஆவடி அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், திலகர் தெருவில், அய்யப்பன் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், ஸ்ரீஅய்யப்பனுக்கு, 18 படிகளுடன் கோவில் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.

இதற்கான பணிகள், காலை 5:30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், பூமி சுத்தி பூஜை, நாக பூஜை, அஸ்வத பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

காலை 10:30 மணியளவில், கேரளா சபரிமலை மேல் சாந்தி மது நம்பூதிரி தலைமையில், பூமி பூஜை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement