நரி போல் சிலர் காத்திருக்கின்றனர்; அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
சென்னை: ''முதல்வர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் தான்'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடந்த தவெகவில் அதிமுகவினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், இன்றைய முதல்வர் அல்ல, என்றைக்கு தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய். இங்கே சில பேர் பேசுகிறார்கள். இவர்கள் ஏன் தவெகவிற்கு வருகிறார்கள், துரோகிகளாக இருக்கிறார்கள் என்கின்றனர். நான் ஒன்றை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
துரோகம் எங்கே நடைபெற்று இருக்கிறது என்பதை நீங்கள் காண வேண்டும். திமுகவுடன் இணைந்து இபிஎஸ் முதல்வர் ஆகலாம் என்று கருதுகிற போது தான் எல்லோருக்கும் அங்கே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்று சொன்னால், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரை நம்பினால் மட்டும் தான் நாடு வாழும். நாட்டு மக்கள் வாழ்வார்கள் என்று நம்பிக்கையுடன் தான் இங்கே வருகை தந்து இருக்கிறார்கள்.
துரோகம் செய்தவர்கள் அங்கே இருக்க கூடும். நல்லவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள், அவர்களை வரவேற்கிறேன். ஏன் என்று சொன்னால் நம்பிக்கை இங்கே இருக்கிறது. நாணயம் இங்கே இருக்கிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது. நல்ல தலைமையை தேடி விஜயபாஸ்கர்கள் வந்திருக்கிறார்கள். தவெக அரசு தடுமாறுமா என நரி போல் சிலர் காத்திருக்கின்றனர். தவெக அரசை காக்கும் சக்திகளாக அதிமுகவினர் தற்போது இணைய வந்துள்ளனர்.
திமுகவுடன் இணைந்து முதல்வர் ஆகும் இபிஎஸ் கனவை தகர்த்துள்ளனர். வயதானவர்களை வைத்துக் கொண்டு மகளிரணி கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் பட்டாளம் இங்கு இருக்கிறது. தடுமாறுபவர்கள் அங்கே இருக்கிறார்கள். அரசியலில் நான் தூக்கி எறியப்பட்ட நேரத்தில் என்னை தாங்கி பிடித்து வருவாய் துறை அமைச்சராக ஆக்கிய வரலாறு இந்திய துணை கண்ட வரலாற்றில் நம் தலைவரை தவிர வேறு யாருக்கும் இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து (16)
பிரேம்ஜி - ,
03 ஜூலை,2026 - 07:32 Report Abuse
தமிழ் நாட்டில் நிறைய நிரந்தர முதல்வர்கள் இருந்தார்கள்! இப்போ காணோம்! இப்போ இருப்பவர் எத்தனை நாளைக்கு நிரந்தரமாக இருப்பார்? குளிப்பாட்ட, குல்லா போட, ஜால்ரா அடிக்க ஒரு உச்ச வரம்பு இல்லையா?வெள்ளைக் காரர்கள் போனாலும் நம் அடிமைத்தனம் போக வில்லை! 0
0
Reply
Balakumar V - ,இந்தியா
02 ஜூலை,2026 - 22:47 Report Abuse
இன்று பிரியாணி சாப்பிட்ட பிறகு கூட்டம் காலி.
கை மேல் பலன்.அவ்வளவு தான். 0
0
Reply
ராஜா - Chennai,இந்தியா
02 ஜூலை,2026 - 21:26 Report Abuse
திமுக, அதிமுக கட்சிகளிடம் இருந்து எம்எல்ஏ களை உருவ இவர்கள் காத்துக்கொண்டு இருந்த மாதிரி. எது எப்படி இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல் ஆள் பிடித்ததை மறக்கக்கூடாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பாருங்கள். 0
0
Reply
VSMani - ,இந்தியா
02 ஜூலை,2026 - 18:05 Report Abuse
அதிமுக விலிருந்து ஓடி வந்தவர்கள் தவெக வை காக்கும் சக்தி என்கிறார். அவர்கள் காக்கும் சக்தியா அல்லது தவெக வை அழிக்கும் சக்தியா என்பது போகப்போகத்தான் தெரியும். அதிமுக விலிருந்து அமைச்சர் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அதற்கு துரோகம் இழைத்துவிட்டு ஓடுகாலிகளாய் தவெக வுக்கு வந்த இவர்கள் எப்படி காக்கும் சக்தி யாக இருக்க முடியும்? இந்த ஓடுகாலிகளின் குணம் மாறாது. MGR பாடல் " மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது" 0
0
Reply
Prabu - Singampunari,இந்தியா
02 ஜூலை,2026 - 17:38 Report Abuse
பகைவன் அவமானப்படுத்தினார் அவரிடமே சரண் 0
0
Reply
Prabu - Singampunari,இந்தியா
02 ஜூலை,2026 - 17:21 Report Abuse
தீயமுக எதிரி என்றால் தவக ? கோட்டு தீயமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி அதிமுக அழிந்து விட்டது என அவமானப் படித்தினார் . கடைசியில் சரண் 0
0
Reply
சூர்யா - ,
02 ஜூலை,2026 - 17:19 Report Abuse
பாவம்! தான் செய்வது இன்னதென்று அறியாமல் பேசுகிறார். இன்னும் கொஞ்ச காலம்தான். தங்களது நரித் தந்திர வேலைகளால் த.வெ.கவில் கோட்டையனை ஓரம் கட்டி விடுவார்கள் பாஸ்கரர்கள். 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
02 ஜூலை,2026 - 16:45 Report Abuse
அதிமுகவை ரெண்டா உடைத்து தவேகவுக்கு ஆதரவு கொடுக்க வைத்து ஆட்சி அமைக்க முயற்சித்தது நரித்தனமா கோபால்? அது முடியாமல் இப்போ ஒவ்வொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை உருவி தவேகவில் சேர வைப்பது நரித்தனமா இல்லையா கோபால்? என்னமா அளக்குனாருங்க 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
02 ஜூலை,2026 - 16:45 Report Abuse
அதிமுகவை ரெண்டா உடைத்து தவேகவுக்கு ஆதரவு கொடுக்க வைத்து ஆட்சி அமைக்க முயற்சித்தது நரித்தனமா கோபால்? அது முடியாமல் இப்போ ஒவ்வொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை உருவி தவேகவில் சேர வைப்பது நரித்தனமா இல்லையா கோபால்? என்னமா 0
0
Reply
Tamilan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 14:44 Report Abuse
இவரும் விஜயும் அமைச்சர்களும் மற்ற கட்சிக்காரர்களுக்காக அப்படிதான் காத்துக்கொண்டிருக்கிறார்கள் 0
0
guru - ,
02 ஜூலை,2026 - 17:22Report Abuse
tamilan ஊளை இடுகிறார்..நல்ல சகுனம் 0
0
Tamilan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 21:56Report Abuse
இவர் ஊளையிடுகிறார் 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement