சந்தை துளிகள்: சந்தை துளிகள்
சீன நிறுவனங்களுக்கு அனுமதி
மின்சார துறை பங்குகள் சரிவுஅரசு திட்டங்களில் நேரடியாக பங்கேற்க சீனாவின் நான்கு மின் உபகரண நிறுவனங்களுக்கு, 2 ஆண்டுகள் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், மின்சார துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஏற்றம் கண்ட பாதுகாப்பு துறை பங்குகள்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கருதப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்பு துறை சார்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஏற்றம் கண்டன.
அதானி கியூ.ஐ.பி., ரூ.15,000 கோடியாக உயர்வு
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பெருநிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, 10,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்ட நிலையில், 3.80 மடங்கு கூடுதல் வரவேற்பு கிடைத்ததால், இலக்கை 15,000 கோடி ரூபாயாக உயர்த்தியது. இருப்பினும், இதன் உத்தேச பங்கு வெளியீட்டு விலை 2,883 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது முந்தைய சந்தை விலையான 3,177.50 ரூபாயை விட 9.30 சதவீதம் தள்ளுபடி விலையாகும்.
பெரிய முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலைக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதால், நேற்று வர்த்தகத்தின் இடையே அதானி பங்கு விலை 3.25 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், வர்த்தக முடிவில் சரிவிலிருந்து மீண்டு, 1.02 சதவீத உயர்வுடன் 3,209.90 ரூபாய் என்ற விலையில் நிலைபெற்றது.
மேலும்
-
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
-
மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு
-
நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி
-
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
-
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்
-
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்