'கருணாநிதி குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் தி.மு.க., துரோகம்'
சென்னை: ''காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த, அனைத்து துரோகங்களுக்கும் ஒரே சாட்சி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு தி.மு.க., செய்த துரோகத்தை பட்டியலிட்டால், ஒரு புத்தகத்தையே உருவாக்கலாம். காவிரி விவகாரம், இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதற்கு, தி.மு.க., தான் காரணம். தமிழகத்திற்கு தி.மு.க., செய்த துரோகம் அனைத்தும், தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
காவிரி விவகாரத்தில், தி.மு.க.,வும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியும் செய்த அனைத்து துரோகங்களுக்கும் ஒரே சாட்சி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அவருக்கு, தி.மு.க., செய்த அனைத்து துரோகங்களும் தெரியும்.
கருணாநிதி குடும்ப சொத்துக்கள், பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுஉள்ளன. அந்த குடும்ப சொத்துக்களை காப்பாற்றவதற்காகவே, கர்நாடகாவுடன் இணக்கமாகவும், விட்டுக் கொடுத்தும் சென்றனர்.
காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் ஒன்று தான் வழி. இதில் எந்த சமரசமும் கிடையாது. தற்போது, மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் கிடைக்காது, அதற்கான சட்டப் போராட்டத்தை எடுத்து வருகிறோம். பரந்துார் விமான நிலையம் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சரியாக கேட்டுள்ளீர்கள்.
கருணாநிதி குடும்ப சொத்துக்கள் பல நாடுகளில் பலவித ரூபங்களில் உள்ளன தோண்டி எடுத்தால் எல்லாமே வெளிவரும் அதனால்தான் சென்ற ஆட்சி கையைவிட்டு போகுமுன் குடும்ப சகிதம் அரசாங்க செலவில் சென்ற பல வெளிநாடுகளின் பயணத்தின்போது ஆங்காகே பணத்தை பல வடிவங்களில் போட்டு காப்பாற்றியுள்ளார் அவைகள் அனைத்தை மத்திய அரசு தோண்டி எடுத்தால் கதை கந்தலாகிவிடும் இனி அவர்கள் ஆட்சியே இருக்காது அமெரிக்காவில் அமைச்சர் நேருவின் பங்காளியான மாஜி நடிகர் நெப்போலியனுக்கு தனியாகவே ஒரு பெரிய பண்ணை வீடே உள்ளது அவர் மூலமாக பல கோடி ரூபாய் சென்றுள்ளது அங்கே பல வடிவங்களில் அவைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன தீர ஆராய்ந்தால் எல்லாமே வெளிவரும் அதே போன்று துபாயிலும் சிங்கப்பூரிலும் பலவிதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளன எல்லாவற்றிற்கும் மாப்பிள்ளைதான் அதிகாரியாம்
1972-ல் காவிரி நீர்பாசன திட்டம் புதுப்பிக்கும்போது அப்போது ஆட்சியில் இருந்த இந்த கருணாநிதி திராவிட ஆட்சி மத்திய அரசுக்கு பயந்து "திராவிட தனி நாடு" கொள்கையையும் கைவிட நேர்ந்தது கர்நாடகத்துடன் 99 -ஆண்டு காவிரி நீர்பாசன தினத்தை சரியாக புதிப்பிக்காததாலும் வந்த வினைதான் இப்போது அல்ல அல்ல எப்போதுமே தமிழ மக்களை அவதிப்பட வைத்தாகிவிட்டது அதற்கு காரண கர்த்தாவே அவர்தான் அந்த ஆட்சிதான் இனி அதை சொல்லி சொல்லி எந்தப்பிரயோஜனமும் இல்லை ஆனால் எல்லா மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்
தயவு செய்து இவன் மூஞ்சிய காட்ட வேன டாம் எரியுது
அவனுக தேர் கடிக்கபட்டாச்ச
இப்ப நீ என்ன செய்ய போர
அத சொல் : சும்ம .......