ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் துாய்மைப் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சம்மேளனத் தலைவர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் மோகனா பேசினர். மாவட்ட செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் பாலச்சந்திரபோஸ், தவக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement