அரப்பளீஸ்வரர் கோவிலில் வரும் 31ல் கொடியேற்றம்

சேந்தமங்கலம்:கொல்லிமலையில், 3,000 ஆண்டு பழமையான அரப்பளீஸ்வரர் உடனுறை அறம் வளர்த்த நாயகி கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு வரும் பக்தர்கள் அரப்பளீஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி, 18ல் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இந்தாண்டுக்கான ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, வரும், 31 காலை, 9:50 மணி முதல், 10:25 மணி வரை கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் திருவீதியுலா நடைபெறும்.
ஆக., 1, 2ல் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆக., 2 இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. ஆக., 3ல் ஆடிப்பெருக்கு நாளன்று கோவில் நிர்வாகம் சார்பில், அதிகாலை, 5:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதியுலா வரும். மதியம், 2:00 மணிக்கு சோமாஸ்கந்தர் பல்லக்கில் வலம் வந்து, தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும்.
ஆக., 4 காலை, 8:45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை, 3:30 மணிக்கு வசந்த உற்சவ அபிஷேகத்துடன் திருவிழா நிறைவடையும். விழா ஏற்பாடுகளை அரப்பளீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement