பைக் திருட்டு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், 42. இவர் கடந்த 20ம் தேதி, தனது உறவினர் சேகர் என்பவரது பைக்கை எடுத்துகொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனை முன் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement