மாணவனுக்கு யோகாவில் 'வெள்ளி'

காஞ்சிபுரம், : சி.பி.எஸ்.இ., கிளஸ்டர் சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி, செங்கல்பட்டில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் கார்த்திக் நாராயணன், வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன் வாயிலாக, வரும் 2ம் தேதி, குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய யோகாசன போட்டியில் பங்கேற்க கார்த்திக் நாராயணன் தகுதி பெற்றிருக்கிறார்.

இவர், காஞ்சிபுரம் சிஷ்ய யோகா பயிற்சி பள்ளியில் யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

Advertisement