திருவருள் இறைபணி மன்ற சொற்பொழிவு

புவனகிரி: புவனகிரி திருவருள் இறைப் பணி மன்றம் சார்பில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சமய சொற்பொழிவு நடந்தது.

தேவாங்க சமூக நாட்டாண்மை ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். 63 நாயனார்களில் ஒருவரான 'கனம்புல்ல நாயனார்' குறித்து கணிதத்துறை ஆராய்சி மாணவி கீர்த்தனா பேசினார்.

நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement