காந்தி மன்றத்தில் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் 'தென்னாப்பிரிக்காவில் காந்தியின் தடம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

காந்தி மன்றத் தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். பொருளாளர் சிவராமசேது முன்னிலை வகித்தார். செயலாளர் ஜானகிராமன் வரவேற்றார. பூண்டி புஷ்பம் கல்லுாரி முன்னாள் வணிகவியல் துறைத்தலைவர் விஜயராமலிங்கம், தென்னாப்பிரிக்காவில் தனது பயண அனுபவங்கள் குறித்து பேசினார்.

காந்தியடிகளின் பொன்மொழிகள் அடங்கிய கையேட்டை பேராசிரியர் விஜயராமலிங்கம் வெளியிட மன்ற செயலாளர் ஜானகிராமன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் நடனசபாபதி, கலியபெருமாள், திருநாவுக்கரசு, ஆசிரியர் கல்யாணராமன், சத்சங்கம் கிருஷ்ணசாமி தீட்சிதர், தமிழரசி சேகர், வனஜா தில்லைநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement