வல்லக்கோட்டையில் தடுப்பின்றி திறந்தவெளி மழைநீர் வடிகால்

ஸ்ரீபெரும்புதுா : ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் வல்லக்கோட்டையில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.

இந்த சாலை வழியே குண்ணம், எச்சூர் உள்ளிட்டப்பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போல, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

இந்த நிலையில், இந்த சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் செல்லும் போது, எதிர்பாராத விதமாக மழைநீர் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

குறிப்பாக, கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பிரதான சாலையோரம் உள்ள, மழைநீர் கால்வாயில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement