வீட்டில் பதுக்கிய 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

போடி: போடியில் விற்பனைக்கா வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திவாகர் 32. கொக்கையர் பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்து விஜய் 25. இருவரும் போடி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானம் அருகே டூவீலரில் நின்று கொண்டு இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தனர். தகவல் அறிந்த மதுவிலக்கு போலீசார் திவாகர், முத்து விஜய் இருவரையும் பிடித்து விசாரித்தில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 6 கிலோ கஞ்சாவை திவாகரன் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது.

உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் திவாகரன், முத்து விஜய் இருவரையும் கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement