சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது

கூடலுார்: கேரளா குமுளி ரோசாப்பூக் கண்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் 21. பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியை காதலிக்க வலியுறுத்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல குமுளி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்த சிறுமிக்கு பூங்கொத்து கொடுத்து காதலிக்க வற்புறுத்தியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். வாலிபரை கைது செய்து பீர்மேடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

Advertisement